கல்வி தந்தை காமராசர்

விருதையிலே முளைத்த செடியாம் - நம் காமராசர் 
ஏழைகளின் பழி தீர்த்த வள்ளலாம் - நம் காமராசர் 

பசிக்கு உணவு எனும் சத்துணுவுத் திட்டத்தால்     
பசியுடன்  இருக்கும் ஏழை மாணவருக்கு 
ஓர் புத்துணர்வை தந்தார் நம் கல்வி தந்தை.

சத்துணவுக்காய் பாடசாலை வந்த - ஏழை 
பள்ளி மாணவர்க்கு தந்தார்,
இலவச சீருடை, புத்தகமும், கல்வியும்,
தந்தார் இலவச சீருடையும் புத்தகமும் கல்வியும்

ஏழை மாணவருக்கு கல்வி என்னும் தீபம் எரிய 
காரணமாயிற்று அவர் தந்த - இலவசத் திட்டங்கள் 
கொழுந்து விட்டு எரிந்தன மாணவர்களின் கல்வி 
அதனாலே உயர்ந்தது விருதை மாவட்ட கல்வி 

கல்வியின் தந்தையாம் காமராசர் - அரசியலில் 
பெருந்தலைவராக இருந்தும் தனக்காக எதையும் சேர்க்கவில்லை 
மக்கள் அன்பை மட்டும் சேர்த்துக்கொண்டார் - நம் காமராசர் 

என்றென்றும் மக்களுக்காக இறுதிவரை வாழ்ந்த தலைவரே 
இனி உம்மை போல் ஒருவர் - இவ்வுலகில் பிறப்பரோ?????


இ.இனியவன்      
  



 

Post a Comment

0 Comments