பாரம்பரிய தமிழ் மருத்துவ மகத்துவ ரகசியம். சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்??

பாரம்பரிய தமிழ் மருத்துவ மகத்துவ ரகசியம்.

    சளி, இருமல் என்றாலே அது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் தான் வரும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வெயில் காலத்திலும் சளி பிடிக்கும். அப்படி கோடை காலத்தில் பிடிக்கும் சளியை விரட்ட சில எளிமையான இயற்கை மருத்துவம். கோடைகாலத்தில் சளி பிடிப்பதற்கு மிக முக்கியமானது பருவ கால மாற்றமும் அதனால்  ஏற்படும் மாற்றங்களும் தான்.

    சளி பிடிப்பதற்கு முக்கியக் காரணம் வைரஸ் தொற்று தான். வைரஸ் தொற்று எந்த பருவ காலத்தில் வேண்டுமானாலும் வரலாம்.அதேபோல பருவ காலங்களில் ஏற்படும் அழற்சிகளாலும் இருமல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    பருவ மாற்றங்களால் ஏற்படுகின்ற சளி பிரச்சினை தொடங்கும் முன் கீழ்வரும் அறிகுறிகள் தென்படும்.

Ø  தும்மல்,

Ø  உடல் வலி,

Ø  இருமல்,,

Ø  மூக்கொழுகுதல்,

Ø  தொண்டை வலி,

Ø  காய்ச்சல்,

Ø  தலைவலி,

Ø  மார்பில் அழுத்தம்,

Ø  உடல் சோர்வு,

Ø  கண்களில் நீர் வடிதல்,    போன்ற அறிகுறிகள் தோன்றும்.

 

    சளி பிடித்தால் என்ன மருந்து, உணவு எடுத்துக் கொண்டாலும் சரி, மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சரி, முதலில் செய்ய வேண்டியது நல்ல ஓய்வு எடுப்பது தான். ஓய்வு எடுக்கும்போது தான் நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படும். அதனால் நன்கு தூங்க வேண்டும். அதேபோல இந்த சமயத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது.

    நல்ல ஓய்வுக்கு அடுத்தபடியாக, நீங்கள் செய்ய வேண்டியது தண்ணீர் நிறைய குடிப்பது. முக்கியம். உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். நீரிழப்பைத் தடுத்து அதிகமாக தண்ணீர் குடிப்பதும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும். இது சளியை வெளியேற்ற உதவி செய்யும்.

சளி பிடித்திருக்கும்போது நிறைய பேர் பழங்கள் சாப்பிட மாட்டார்கள். சளி அதிகமாகும் என பயப்படுவார்கள். ஆனால் வைட்டமின் சி நிறைந்த பழங்களை சளி, இருமல் இருக்கும் போது அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராட முடியும். வைட்டமின் சி சப்ளிமெண்ட்டுகள், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து சப்ளிமெண்ட் எடுப்பவர்களுக்கு இந்த பருவ கால பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகம் கொண்ட மூலிகைகள் மற்றும் மசாலாக்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் சளி மற்றும் தொண்டை வலி பிரச்சினையைச் சரிசெய்ய முடியும்

இஞ்சி, பூண்டு, இலவங்கப்பட்டை, மிளகு, கிராம்பு போன்ற மசாலாக்களும் துளசி, அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை போன்ற மூலிகைகளும் எடுத்துக் கொண்டு வந்தால் கோடை கால சளியை சரிசெய்ய முடியும். மேலே சொன்ன வீட்டு வைத்தியங்களோடு அதிக ஆற்றல் கொண்டது இந்த நீராவி பிடித்தல் தான். சளி பிரச்சினை இருக்கும்போது துளசி, மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை கொதிக்கும் நீரில் போட்டு, நீராவி பிடித்து வர சளித்தொல்லை குறையும்.

பாரம்பரிய தமிழ் மருத்துவ மகத்துவ ரகசியம் காப்போம் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்

Post a Comment

0 Comments