பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 8-வது தவணை விரைவில் விடுவிக்கப்படவுள்ளது. இது வரை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் தற்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து 8-வது தவணையை பெற்றிடுங்கள்.
பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்வது எப்படி?
✓ முதலில், நீங்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.pmkisan.gov.in ஐப் பார்வையிட வேண்டும்
✓ அதில் Farmers' corner என்பதை கிளிக் செய்யுங்கள்
✓ பின்னர் New Farmer Registration என்பதை கிளிக் செய்யுங்கள்
✓ பின் ஆதார் அட்டையின் விவரங்களை நிரப்பி continue என்பதைக் கிளிக் செய்க
✓ இதன் பின் மற்றொரு பக்கம் திறக்கும் அதில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உங்கள் விவரங்கள் தோன்றும். நீங்கள் முதல் முறையாக பதிவு செய்கிறீர்கள் என்றால், Record not found with given details, do you want to register on PM-KISAN Portal என கொடுக்கப்பட்ட விவரங்களுடன் பதிவு செய்ய விரும்புகீறீர்காள என தோன்றும்.
✓ அதற்கு Yes and proceed என்பதைக் கிளிக் செய்யவும்.
✓ பின் ஒரு படிவம் தோன்றும், அதில் கேட்கப்படும் தகவல்களை சரியாக நிரப்பி சேமிக்கவும்.
✓ பின்னர், உங்கள் நிலத்தின் விவரங்கள் கேட்கப்படும்.
✓ சரியான தகவலை நிரப்பி சேமிக்கவும்.
✓ இதன் பின் பதிவு செயல்முறை முடிவுபெறும்.
✓ பதிவு செய்த பின் உங்ளுக்கு ஒரு பதிவு எண் மற்றும் குறிப்பு எண் வழங்கப்படும் அவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஆன்லைனில் மூலம் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்க்கலாம்?
✓ அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in ஐப் பார்வையிடவும்
✓ முகப்பு பக்கத்தில் Farmers' Corner என்பதை கிளிக் செய்யவும்.
✓ அதில் Beneficiary List என்பதை கிளிக் செய்யவும்.
✓ பின்னர், உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்களை உள்ளிடவும்
✓ விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் முழுமையான பட்டியலைக் காணலாம்.
பெயர் பட்டியலில் இல்லை என்றால் எங்கே புகார் செய்வது?
✓ பி.எம் கிசான் ஹெல்ப்லைன் எண்கள்- 011-24300606,
0120-6025109, 155261
✓ பி.எம் கிசான் கட்டணமில்லா எண்- 18001155266
✓ பி.எம் கிசான் லேண்ட்லைன் எண்கள் -11-23381092. 23382401

0 Comments