திருமணம் 💞 எனும் பந்தம் - கணவன், மனைவியின் அன்பு பாசம்


பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் 

செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.. 😍

 


முதலிரவில் அவள் முகத்தை பார்த்து

அதிர்ச்சியடைகிறான்...

காரணம் அவள் கொஞ்சம் கருப்பு... 🤦🏻‍♂️

 

அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை 

மனைவியை வெறுத்தான்... 

படுக்கையை விட்டு

தள்ளி வைத்தான்..😒

 

என்னதான் தன் கனவன் தன்னை

வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த

அன்பும் பாசமும் வைத்திருந்தாள்... 🥰

 

இப்படித்தான் ஒருநாள்..  

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள் 

நான் உங்கள் மனைவி 

உங்களை காதலிக்கின்றேன்! ❤️

 

அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று

அவள் சொல்ல 

இவன் ஒன்றும் சொல்லாமல்

சென்றுவிடுகிறான்... 🤷🏻‍♂️

 

இரவு 1மணி போல அவனுக்கு திடீரென

நெஞ்சு வலி வருகிறது..

வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! 

என்று கதறுகிறான்... 

 

அவனை பார்த்த மனைவி அவனைவிட

கதறுகிறாள்... 

உடனே தன் வீட்டாருக்கும் கணவனின்

நண்பருக்கும் Phone செய்கிறாள்.... 🥺

 

கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள

முடியாதவள்... 

தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி

போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி

சுற்றி வருகிறாள்.. 🤦🏻‍♂️

 

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு

திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை

நாள் வைத்த பாசமோ!!! 😢

 

கணவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு

வேகமாக வருகிறான்... தன் மார்போடு

கணவனை அணைத்துக்கொண்டு அண்ணா 

கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் 

என்கிறாள்... 😑

 

அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன்

என்று கண் மூடி அழுகிறான் கணவன்...😔

 

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் 

சேர்க்கப்பட்டான்... மனைவியின்

உறவினர்கள் வருகின்றனர்... 🧐

 

அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை

இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா

என்று எல்லோரும் வியந்தும்

பொறாமையுடனும் அவளை

பார்க்கின்றனர்.... 💞

 

உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த

பாதிப்பு... 

என்கிறார் மருத்துவர்... 🚬🚬

 

உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல

அவன் தன் மனைவியை தேடுகிறான்...

அவள் கதவு அருகில் நின்று இன்னும்

அழுது கொண்டுதான் 

இருக்கிறாள்.. 😭

 

தன் மனைவியின் பெயரை முதன்முதலாக

சொல்லி சத்தமாக அழைக்கிறான்... 

சடார் என்று "என்னங்க" என்று பதறி

ஓடிவருகிறாள்... 😓

 

அழுது அழுது அவள் கண்கள் 

சிவந்து போனது... 

அவள் கையை பிடித்துக்கொண்டு இனி

நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக

என்கிறான்... 💙

 

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற

சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர

அழுதுக்கொண்டே சிரிக்கிறாள்... 😓😊

 

என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன்

கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர்... 

நான் உங்கள் மனைவி என்று ஒரு

வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி 

அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள்...

அந்த காதல் கொண்ட மனைவி... 😘

 

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை

காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும்

இருக்கின்றார்கள் இந்த 

உலகத்தில்.. 💝

 

எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில்

நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும்

ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும்

நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து

வரும் உறவு... 💞💞

#கணவன்_மனைவி 

#திருமணம் 💞

Post a Comment

0 Comments